Sunday, August 18, 2019

8. பகல் போலும் நெஞ்சத்தார்






8. பகல் போலும் நெஞ்சத்தார் 


பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா இன்னா
நயம் இல் மனத்தவர் நட்பு

எவை துன்பம் தரும்:
சூரியஒளி போல தூய நெஞ்சம் கொண்டவர் பண்பற்றவராக இருப்பது, 
முகம் மலர சிரித்து மகிழும் தோழமை நெஞ்சத்தில் அன்பற்று இருப்பது, 
போரில் புறமுதுகிட்டு ஓடும் நிலை வருவது,
நீதியற்ற நெஞ்சம் கொண்டவர் நட்பு,  
ஆகியன துன்பம் தருவனவாம்.

Pakal pōlum neñcattār paṇpu iṉmai iṉṉā
nakai āya naṇpiṉār nār iṉmai iṉṉā
ikaliṉ eḻuntavar ōṭṭu iṉṉā iṉṉā
nayam il maṉattavar naṭpu

---





No comments:

Post a Comment