6. அற மனத்தார் கூறும்
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா
இடும்பை உடையார் கொடை இன்னா இன்னா
கொடும்பாடு உடையார் வாய் சொல்
எவை துன்பம் தரும்:
அருள் மனம் கொண்ட அறவோர் சினந்து கூறும் கடுஞ்சொல்,
நெஞ்சுரம் கொண்ட வீரர் போர்க்களத்தில் செயலாற்றாது சோம்பியிருத்தல்,
வறுமையில் வாடுபவர் கொடையாளியாக இருத்தல்,
கொடியவர் கூறும் தீய சொல்,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Aṟa maṉattār kūṟum kaṭu moḻi iṉṉā
maṟa maṉattār ñāṭpil maṭintu oḻukal iṉṉā
iṭumpai uṭaiyār koṭai iṉṉā iṉṉā
koṭumpāṭu uṭaiyār vāy col
---
No comments:
Post a Comment