Sunday, August 18, 2019

5. சிறை இல் கரும்பினை






5. சிறை இல் கரும்பினை


சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சிறை இல் கரும்பினை காத்து ஓம்பல் இன்னா
உறை சோர் பழம் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா
முறை இன்றி ஆளும் அரசு இன்னா இன்னா
மறை இன்றி செய்யும் வினை

எவை துன்பம் தரும்:
வேலியற்ற கரும்புத்தோட்டத்தைக் காவல் செய்வது, 
மழைபெய்கையில் ஒழுகும் பழைய கூரை கொண்ட வீட்டில் வாழ்வது, 
நீதிநெறியற்ற அரசாட்சியில் வாழ்வது, 
யாவரும் அறியும் வகையில் வெளிப்படையாகச் செயலாற்றுவது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Ciṟai il karumpiṉai kāttu ōmpal iṉṉā
uṟai cōr paḻam kūrai cērntu oḻukal iṉṉā
muṟai iṉṟi āḷum aracu iṉṉā iṉṉā
maṟai iṉṟi ceyyum viṉai

---





No comments:

Post a Comment