Sunday, August 18, 2019

4. எருது இல் உழவர்க்கு






4. எருது இல் உழவர்க்கு


எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல். 

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
எருது இல் உழவர்க்கு போகு ஈரம் இன்னா
கருவிகள் மாறி புறங்கொடுத்தல் இன்னா
திருவுடையாரை செறல் இன்னா இன்னா
பெரு வலியார்க்கு இன்னா செயல்

எவை துன்பம் தரும்:
உழவருக்கு ஏரோட்டுவதற்கு எருது இல்லாத பொழுது வயலின் ஈரம், 
போர்க்கருவி செயலிழந்த  நிலையில் புறமுதுகிட்டுத் தப்பிக்க நேரும் வீரரின் நிலை, 
செல்வந்தரிடம் சினம் கொண்டு பகையை வளர்த்துக் கொள்வது, 
வலிமை நிறைந்தவருக்குத் தீமை செய்தல், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Erutu il uḻavarkku pōku īram iṉṉā
karuvikaḷ māṟi puṟaṅkoṭuttal iṉṉā
tiruvuṭaiyārai ceṟal iṉṉā iṉṉā
peru valiyārkku iṉṉā ceyal

---





No comments:

Post a Comment