Sunday, August 18, 2019

3. கொடுங்கோல் மறமன்னர்






3. கொடுங்கோல் மறமன்னர்


கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கொடும் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா
கடுமொழியாளர் தொடர்பு இன்னா இன்னா
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு

எவை துன்பம் தரும்:
கொடுங்கோலாட்சி நடைபெறும் நாட்டில் வாழ்வது,  
நெடிய நீர்நிலையைப் படகின்றி நீந்திக் கடப்பது, 
கடுஞ்சொல் கூறுபவருடன் தொடர்பு கொண்டிருப்பது, 
நிம்மதி இழந்த மனதுடன் உயிர் வாழ்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Koṭum kōl maṟa maṉṉar kīḻ vāḻtal iṉṉā
neṭunīr puṇai iṉṟi nīntutal iṉṉā
kaṭumoḻiyāḷar toṭarpu iṉṉā iṉṉā
taṭumāṟi vāḻtal uyirkku

---





No comments:

Post a Comment