Sunday, August 18, 2019

2. பார்ப்பார் இல் கோழியும் நாயும்






2. பார்ப்பார் இல் கோழியும் நாயும்


பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புடைவை யுடையின்னா வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா
பாத்து இல் புடைவை உடை இன்னா ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு

எவை துன்பம் தரும்:
பார்ப்பார் வீட்டினுள் கோழியும் நாயும் நுழைதல், 
கணவன் சொல்லுக்குக் கட்டுப்படாத மனைவி, 
பகுப்பு இல்லாத உடை அணிதல், 
காப்பாற்றாத அரசனின் ஆட்சியில் வாழ்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Pārppār il kōḻiyum nāyum pukal iṉṉā
ārtta maṉaivi aṭaṅkāmai naṟku iṉṉā
pāttu il puṭaivai uṭai iṉṉā āṅku iṉṉā
kāppu āṟṟā vēntaṉ ulaku

---





No comments:

Post a Comment