39. கொடுக்கும் பொருள் இல்லான்
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா
கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா
கொடுத்து விடாமை கவிக்கு இன்னா இன்னா
மடுத்துழி பாடா விடல்
எவை துன்பம் தரும்:
கொடுப்பதற்குப் பொருளைக் கொண்டிராதவரின் ஈகை குணம்,
பாக்கை மெல்லும்பொழுது இடைப்படும் கல்,
புகழ்ந்து பாடும் பாவலருக்குப் பரிசு அளிக்காமை,
தடங்கல் ஏற்பட்டதால் தொடங்கிய பாடலை முடிக்காமல் விடுதல்,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Koṭukkum poruḷ illāṉ vaḷḷaṉmai iṉṉā
kaṭittu amainta pākkiṉuḷ kal paṭutal iṉṉā
koṭuttu viṭāmai kavikku iṉṉā iṉṉā
maṭuttuḻi pāṭā viṭal
---
No comments:
Post a Comment