Sunday, August 18, 2019

38. பிறன் மனையாள் பின் நோக்கும்






38. பிறன் மனையாள் பின் நோக்கும்


பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா
மறம் இலா மன்னர் செரு புகுதல் இன்னா
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா இன்னா
திறன் இலான் செய்யும் வினை

எவை துன்பம் தரும்:
மற்றொருவரின் மனைவி மேல் காமுறும் அறிவின்மை, 
வீரமற்ற மன்னர் போருக்குச் செல்லுதல், 
விரைந்தோடும் குதிரை மீது சேணம்  இல்லாது பயணிப்பது, 
தொழிலில் திறமையற்றவர் செய்யும் பணி, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Piṟaṉ maṉaiyāḷ piṉ nōkkum pētaimai iṉṉā
maṟam ilā maṉṉar ceru pukutal iṉṉā
veṟum puṟam vem puravi ēṟṟu iṉṉā iṉṉā
tiṟaṉ ilāṉ ceyyum viṉai

---





No comments:

Post a Comment