Sunday, August 18, 2019

37. நறிய மலர் பெரிது






37. நறிய மலர் பெரிது 


நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா
அறியான் வினாப்படுதல் இன்னா ஆங்கு இன்னா
சிறியார் மேல் செற்றம் கொளல்

எவை துன்பம் தரும்:
கவரும் அழகுள்ள மலருக்கு நறுமணம் இல்லாதிருப்பது, 
அடையவேண்டிய கரையின் தொலைவு அறியாது நீரில் இறங்கி நீந்துவது, 
விடை அறியாதவர்  கேள்விகளை எதிர்கொள்வது,  
சிறியோர் மீது சீற்றம் கொள்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Naṟiya malar peritu nāṟāmai iṉṉā
tuṟai aṟiyāṉ nīr iḻintu pōkutal iṉṉā
aṟiyāṉ viṉāppaṭutal iṉṉā āṅku iṉṉā
ciṟiyār mēl ceṟṟam koḷal

---





No comments:

Post a Comment