35. எழிலி உறை நீங்கின்
எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா
குழவிகள் உற்ற பிணி இன்னா இன்னா
அழகுடையான் பேதை எனல்
எவை துன்பம் தரும்:
முகில் உலக மக்களுக்குத் தேவையான மழையைத் தராது போதல்,
குழல் தரும் காய்ந்த மூங்கில்கள் காற்றில் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்பும் ஓசை,
குழந்தைகள் நோய் வாய்ப்படுவது,
அழகுடையவர் அறிவற்றவராகவும் இருந்துவிடுவது,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Eḻili uṟai nīṅkiṉ īṇṭaiyārkku iṉṉā
kuḻal il iyamarattu ōcai naṟku iṉṉā
kuḻavikaḷ uṟṟa piṇi iṉṉā iṉṉā
aḻakuṭaiyāṉ pētai eṉal
---
No comments:
Post a Comment