33. கள் உண்பான் கூறும்
கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கள் உண்பான் கூறும் கரும பொருள் இன்னா
முள்ளுடை காட்டில் நடத்தல் நனி இன்னா
வெள்ளம் படு மா கொலை இன்னா ஆங்கு இன்னா
கள்ள மனத்தார் தொடர்பு
எவை துன்பம் தரும்:
குடிபோதைக்கு அடிமையானவர் செய்வேன் எனக் கொடுக்கும் வாக்குறுதி,
முட்கள் நிறைந்த காட்டில் நடந்து பயணப்படுதல்,
வெள்ளத்தில் சிக்கிய விலங்குக்குத் தப்ப உதவாமல் அதனைச் சாக விடுதல்,
வஞ்சனை செய்யும் நெஞ்சத்தோருடன் கொள்ளும் உறவு,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Kaḷ uṇpāṉ kūṟum karuma poruḷ iṉṉā
muḷḷuṭai kāṭṭil naṭattal naṉi iṉṉā
veḷḷam paṭu mā kolai iṉṉā āṅku iṉṉā
kaḷḷa maṉattār toṭarpu
---
No comments:
Post a Comment