32. தன்னைத்தான் போற்றாது
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா
முன்னை உரையார் புறமொழி கூற்று இன்னா
நன்மை இலாளர் தொடர்பு இன்னா ஆங்கு இன்னா
தொன்மை உடையார் கெடல்
எவை துன்பம் தரும்:
தனது வாழ்வையும் நலத்தையும் பேணாது வாழ்வது,
நேரடியாகக் கூறாமல் புறம் பேசுவது,
பண்பற்றவருடன் கொள்ளும் நட்பு,
வாழ்வாங்கு வாழ்ந்தவரின் நிலை தாழ்தல்,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Taṉṉaittāṉ pōṟṟātu oḻukutal naṉku iṉṉā
muṉṉai uraiyār puṟamoḻi kūṟṟu iṉṉā
naṉmai ilāḷar toṭarpu iṉṉā āṅku iṉṉā
toṉmai uṭaiyār keṭal
---
No comments:
Post a Comment