31. பண் அமையா யாழின்
பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர் பகை.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா
மண் இல் முழவின் ஒலி இன்னா ஆங்கு இன்னா
தண்மை இலாளர் பகை
எவை துன்பம் தரும்:
இசை கூட்டாத யாழுடன் இசைந்து பாட விரும்புவது,
கோள்களின் நிலையைக் கணிக்கும் வகை அறியாதவர் நேரத்தைக் குறித்துக் கொடுப்பது,
தாளலயத்தைக் கூட்ட மத்தளத்தில் கரிய சாந்து பூசாத பொழுது அதை இசைப்பது,
பண்பில்லாதவரைப் பகைத்துக் கொள்வது,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Paṇ amaiyā yāḻiṉ kīḻ pāṭal peritu iṉṉā
eṇ aṟiyā māntar oḻukku nāḷ kūṟṟu iṉṉā
maṇ il muḻaviṉ oli iṉṉā āṅku iṉṉā
taṇmai ilāḷar pakai
---
No comments:
Post a Comment