Sunday, August 18, 2019

30. நெடு மரம் நீள் கோட்டு






30. நெடு மரம் நீள் கோட்டு


நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா
கடும் சின வேழத்து எதிர் சேறல் இன்னா
ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா இன்னா
கடும் புலி வாழும் அதர்

எவை துன்பம் தரும்:
நெடிதுயர்ந்த மரத்தின் உச்சியில் உள்ள நுனிக் கொம்பில் ஏறி கீழே குதித்தல், 
மதம் கொண்ட யானையின் முன் செல்வது,
பாம்புப் புற்றில் கை நுழைப்பது,
கொடிய புலி வாழும் காட்டிற்குச் செல்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Neṭu maram nīḷ kōṭṭu uyar pāytal iṉṉā
kaṭum ciṉa vēḻattu etir cēṟal iṉṉā
oṭuṅki aravu uṟaiyum il iṉṉā iṉṉā
kaṭum puli vāḻum atar

---





No comments:

Post a Comment