29. குறி அறியான் மாநாகம்
குறியறியான் மாநாக மாட்டுவித்த லின்னா
தறியறியா னீரின்கட் பாய்ந்தாட லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா
தறி அறியான் கீழ் நீர் பாய்ந்தாடுதல் இன்னா
அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா இன்னா
செறிவு இலான் கேட்ட மறை
எவை துன்பம் தரும்:
வித்தை அறியாதவர் பெரியதொரு பாம்பை ஆட்டுவிக்க முற்படுதல்,
நீரின் ஆழம் அறியாமல் நீர்நிலையில் குதித்து நீந்துதல்,
கற்க விரும்பாத அறிவற்ற மக்களைப் பெறுதல்,
கட்டுப்பாடு இல்லாதவர் தாம் அறிந்த முக்கியமான செய்தியைக் கையாளும் முறை,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Kuṟi aṟiyāṉ mā nākam āṭṭuvittal iṉṉā
taṟi aṟiyāṉ kīḻ nīr pāyntāṭutal iṉṉā
aṟivu aṟiyā makkaḷ peṟal iṉṉā iṉṉā
ceṟivu ilāṉ kēṭṭa maṟai
---
No comments:
Post a Comment