Sunday, August 18, 2019

28. கல்லாதான் ஊரும் கலிமா






28. கல்லாதான் ஊரும் கலிமா


கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
கல்லாதான் ஊரும் கலிமா பரிப்பு இன்னா
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா
இல்லாதார் வாய் சொல்லின் நயம் இன்னா ஆங்கு இன்னா
கல்லாதான் கோட்டி கொளல்

எவை துன்பம் தரும்:
குதிரையேற்றம் பயிலாதவர் குதிரையைச் செலுத்துதல்,
வலிமையற்றவரின் வெற்றுப் பேச்சு,  
பொருள் இல்லாதவரின் நயமான பேச்சு,  
கற்றவர் அவையில் கல்லாதவரின் பேச்சு, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Kallātāṉ ūrum kalimā parippu iṉṉā
vallātāṉ collum uraiyiṉ payaṉ iṉṉā
illātār vāy colliṉ nayam iṉṉā āṅku iṉṉā
kallātāṉ kōṭṭi koḷal

---





No comments:

Post a Comment