26. பெரியாரோடு யாத்த
பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா
அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா
பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா இன்னா
பெரியார்க்கு தீய செயல்
எவை துன்பம் தரும்:
பெரியவர்களுடன் கொண்ட உறவைத் துண்டித்துக் கொள்வது,
செய்தற்கரிய காரியங்களைச் செய்து உதவுவதாக வாக்களிப்பது,
பரிவு காட்டாதவரிடம் சென்று தனது துயர் சொல்லிப் புலம்புவது,
பெரியவர்களுக்குத் தீங்கு செய்வது,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Periyārōṭu yātta toṭar viṭutal iṉṉā
ariyavai ceytum eṉa uraittal iṉṉā
pariyārkku tām uṟṟa kūṟṟu iṉṉā iṉṉā
periyārkku tīya ceyal
---
No comments:
Post a Comment