25. நட்டார் இடுக்கண்கள்
நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா ஆங்கு இன்னா
நட்ட கவற்றினால் சூது
எவை துன்பம் தரும்:
நட்புடையவர் படும் துயரைக் காணுவது,
பகைவரின் வெற்றிச் செருக்கைக் காணுவது,
உறவுகள் இல்லாத ஊரில் வாழ்வது,
சூதாடும் கட்டை உருட்டி விரும்பிச் சூதாடுவது,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Naṭṭār iṭukkaṇkaḷ kāṇṭal naṉi iṉṉā
oṭṭār perumitam kāṇṭal peritu iṉṉā
kaṭṭu ilā mūtūr uṟaivu iṉṉā āṅku iṉṉā
naṭṭa kavaṟṟiṉāl cūtu
---
No comments:
Post a Comment