23. சிறை இல்லா மூதூரின்
சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர் சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம்.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா
அறை பறை அன்னார் சொல் இன்னா இன்னா
நிறை இலான் கொண்ட தவம்
எவை துன்பம் தரும்:
மதில் இல்லாத ஊரின் வாயிலைக் காத்தல்,
குடிநீருக்காக உள்ள நீர்நிலையில் உடைகளைத் துவைத்தல்,
பறை அறிவிப்பது போன்று அலர் பரப்புவோர் சொல்,
புலனடக்கமற்றவருக்குத் தவம் செய்வது,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Ciṟai illā mūtūriṉ vāyil kāppu iṉṉā
tuṟai iruntu āṭai kaḻuvutal iṉṉā
aṟai paṟai aṉṉār col iṉṉā iṉṉā
niṟai ilāṉ koṇṭa tavam
---
No comments:
Post a Comment