Sunday, August 18, 2019

22. யானை இல் மன்னரை






22. யானை இல் மன்னரை


யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா றிடையிட்ட வூர்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
யானை இல் மன்னரை காண்டல் நனி இன்னா
ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா ஆங்கு இன்னா
கான் யாறு இடையிட்ட ஊர்

எவை துன்பம் தரும்:
யானைப்படை இல்லா மன்னரைக் காண்பது, 
பிற உயிர்களின் உடலை உண்டு தன் உடலை வளர்த்துக் கொள்வது, 
தேனும் நெய்யும் திரிந்து புளிப்புச் சுவை பெற்றுவிடுதல்,
காட்டாறுகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் உள்ள ஊரில் வாழ்வது, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Yāṉai il maṉṉarai kāṇṭal naṉi iṉṉā
ūṉai tiṉṟu ūṉai perukkutal muṉ iṉṉā
tēṉ ney puḷippiṉ cuvai iṉṉā āṅku iṉṉā
kāṉ yāṟu iṭaiyiṭṭa ūr

---





No comments:

Post a Comment