21. ஈத்த வகையால்
ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஓத்திலாப் பார்ப்பா னுரை.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா
பாத்து உணல் இல்லாருழை சென்று உணல் இன்னா
மூத்த இடத்து பிணி இன்னா ஆங்கு இன்னா
ஓத்து இலா பார்ப்பான் உரை
எவை துன்பம் தரும்:
பெற்ற கொடையின் அளவு குறித்து மனம் நிறைந்து மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுப்பது,
பகிர்ந்து உண்ணும் பண்பில்லாதவருடன் சேர்ந்து உணவு உண்பது,
முதுமையில் நோய்வாய்ப்படல்,
மறை ஓதா பார்ப்பனர் கூற்று,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Ītta vakaiyāl uvavātārkku īppu iṉṉā
pāttu uṇal illāruḻai ceṉṟu uṇal iṉṉā
mūtta iṭattu piṇi iṉṉā āṅku iṉṉā
ōttu ilā pārppāṉ urai
---
No comments:
Post a Comment