20. மாரி நாள் கூவும் குயிலின்
மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா
வீரம் இலாளர் கடுமொழி கூற்று இன்னா
மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா ஆங்கு இன்னா
மூரி எருத்தால் உழவு
எவை துன்பம் தரும்:
இளவேனில் காலம் தவறி மழைநாளில் துணைதேடிக் கூவும் குயிலின் குரல்,
அன்பில்லா நெஞ்சத்தவர் கூறும் கடுஞ்சொல்,
மழை வளம் பொய்த்துவிட்ட உலகின் நிலை,
கிழடு தட்டிய எருது பூட்டி செய்யும் உழவு,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Māri nāḷ kūvum kuyiliṉ kural iṉṉā
vīram ilāḷar kaṭumoḻi kūṟṟu iṉṉā
māri vaḷam poyppiṉ ūrkku iṉṉā āṅku iṉṉā
mūri eruttāl uḻavu
---
No comments:
Post a Comment