19. குலத்து பிறந்தவன்
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தில் குலமில் வழி.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
குலத்து பிறந்தவன் கல்லாமை இன்னா
நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா
நலத்தகையார் நாணாமை இன்னா ஆங்கு இன்னா
கலத்தல் குலம் இல் வழி
எவை துன்பம் தரும்:
நற்குடியில் பிறந்தவர் கல்வி கற்காதிருப்பது,
நிலத்தில் விதைத்த நல்லவிதைகள் விளையாமல் போவது,
நற்பண்பு கொண்டவர் பழியஞ்சாமல் இருப்பது,
பண்பாட்டு விழுமியங்களில் வேறுபட்ட குடும்பங்கள் கொள்ளும் உறவு,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Kulattu piṟantavaṉ kallāmai iṉṉā
nilattu iṭṭa nal vittu nāṟāmai iṉṉā
nalattakaiyār nāṇāmai iṉṉā āṅku iṉṉā
kalattal kulam il vaḻi
---
No comments:
Post a Comment