Sunday, August 18, 2019

17. ஆன்று அவிந்த சான்றோருள்






17. ஆன்று அவிந்த சான்றோருள் 


ஆன்றவிந்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா ஆங்கு இன்னா
ஈன்றாளை ஓம்பா விடல்

எவை துன்பம் தரும்:
கல்வியிற் சிறந்த சான்றோர் அவையில் கல்லாத ஒருவர் பங்கு பெறும் நிலை, 
வாழ்வு இருண்டு போன பொழுதும் கொடையளிப்பது, 
துன்பங்களைச் சகித்துக்கொண்டு வாழத் தெரியாதவர் நோன்பு வாழ்வை மேற்கொள்வது, 
பெற்ற தாயைக் காப்பாற்றாமல் தவிக்கவிடுதல், 
ஆகியன துன்பம் தருவனவாம்.

Āṉṟu avinta cāṉṟōruḷ pētai pukal iṉṉā
māṉṟu iruṇṭa pōḻtiṉ vaḻaṅkal peritu iṉṉā
nōṉṟu avintu vāḻātār nōṉpu iṉṉā āṅku iṉṉā
īṉṟāḷai ōmpā viṭal

---





No comments:

Post a Comment