Sunday, August 18, 2019

15. புல் ஆர் புரவி மணி






15. புல் ஆர் புரவி மணி


புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல்.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா
கல்லார் உரைக்கும் கரும பொருள் இன்னா
இல்லாதார் நல்ல விழைவு இன்னா ஆங்கு இன்னா
பல்லாருள் நாணுப்படல்

எவை துன்பம் தரும்:
புல் உண்ணும் குதிரையின் மீது தன் வரவை அறிவிக்கும் மணியின்றி பயணிப்பது, 
பட்டறிவற்றவர் தரும் செயல்முறை விளக்க அறிவுரை, 
செல்வம் இல்லாதோர் சிறந்தவற்றை அடைய விரும்பும் விருப்பம், 
பலர் முன்னர் மானக்கேடு ஏற்பட்டு நாணும் நிலைக்கு உள்ளாவது,
ஆகியன துன்பம் தருவனவாம்.

Pul ār puravi maṇi iṉṟi ūrvu iṉṉā
kallār uraikkum karuma poruḷ iṉṉā
illātār nalla viḻaivu iṉṉā āṅku iṉṉā
pallāruḷ nāṇuppaṭal

---





No comments:

Post a Comment