14. வணர் ஒலி ஐம்பாலார்
வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர் தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா
துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா
புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா இன்னா
உணர்வார் உணராக்கடை
எவை துன்பம் தரும்:
சுருண்ட அடர்ந்த கருங்கூந்தலை ஐந்து வகையில் அள்ளி முடிக்கும் பெண்கள் தம் அன்பரை ஏமாற்றுதல்,
கொத்தாகத் தொங்கும் மாம்பழங்கள் உண்பவர் இன்றி தானே அழுகிவிழும் நிலை,
மனம் ஒத்து வாழ்ந்த பெண்ணைப் பிரிய நேர்வது,
புரிந்துகொள்ளும் அறிவுடையவர் புரிந்து கொள்ளாமல் போவது,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Vaṇar oli aimpālār vañcittal iṉṉā
tuṇar tūṅku māviṉ paṭu paḻam iṉṉā
puṇar pāvai aṉṉār pirivu iṉṉā iṉṉā
uṇarvār uṇarākkaṭai
---
No comments:
Post a Comment