13. மணி இலா குஞ்சரம்
மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
மணி இலா குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா
பணியாத மன்னர் பணிவு இன்னா இன்னா
பிணி அன்னார் வாழும் மனை
எவை துன்பம் தரும்:
வரவை அறிவிக்கும் மணியோசை எழுப்பாத யானையில் அறிவிப்பின்றி அரசர் வருவது,
பகையை வெல்லும் துணிவற்றவர் வெல்வேன் என்று சூளுரைப்பது,
பணியாதவர் என்ற செருக்குடைய மன்னர் பணிவது,
பீடிக்கும் நோய் போன்று கணவரை வருத்தும் மனைவியுடன் வாழ்வது,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Maṇi ilā kuñcaram vēntu ūrtal iṉṉā
tuṇivu illār collum taṟukaṇmai iṉṉā
paṇiyāta maṉṉar paṇivu iṉṉā iṉṉā
piṇi aṉṉār vāḻum maṉai
---
No comments:
Post a Comment