10. பொருள் உணர்வார் இல்வழி
பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
பொருள் உணர்வார் இல்வழி பாட்டு உரைத்தல் இன்னா
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா
அருள் இல்லார்தம்கண் செலவு இன்னா இன்னா
பொருள் இல்லார் வண்மை புரிவு
எவை துன்பம் தரும்:
பொருளைப் புரிந்து கொள்ள இயலாதவரிடம் சென்று பாடலைப் படிப்பது,
இருளடைந்துள்ள சின்னஞ்சிறு வீதியில் தனித்துப் போக நேர்வது,
பொருள் வேண்டி கருணை மனமற்றவரை நாடிச் செல்லும் நிலை,
வறுமை நிலையில் உள்ளோர் பிறருக்கு வழங்கி உதவ விரும்புவது,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Poruḷ uṇarvār ilvaḻi pāṭṭu uraittal iṉṉā
iruḷ kūr ciṟu neṟi tām taṉippōkku iṉṉā
aruḷ illārtamkaṇ celavu iṉṉā iṉṉā
poruḷ illār vaṇmai purivu
---
No comments:
Post a Comment