கடவுள் வாழ்த்து - முக்கண் பகவன் அடி
முக்கட் பகவ னடி தொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
முக்கண் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா
சக்கரத்தானை மறப்பு இன்னா ஆங்கு இன்னா
சத்தியான் தாள் தொழாதார்க்கு
எவை துன்பம் தரும்:
முக்கண் கொண்ட சிவனை வழிபடாமை,
பனைக்கொடி கொண்ட பலராமனை நினையாமை,
சக்கரப்படை கொண்ட மாலவனை மறத்தல்,
சக்தியான் வேலவனை வணங்காமை,
ஆகியன துன்பம் தருவனவாம்.
Mukkaṇ pakavaṉ aṭi toḻātārkku iṉṉā
poṟpaṉai veḷḷaiyai uḷḷātu oḻuku iṉṉā
cakkarattāṉai maṟappu iṉṉā āṅku iṉṉā
cattiyāṉ tāḷ toḻātārkku
---
No comments:
Post a Comment